இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது: ,கடந்த 4 மாதங்களாக வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, வருவாய்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் சோதனை மற்றும் ஆய்வு நடத்தி விதியை மீறி செயல்பட்டதாக 152 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனா். இதனால் அந்த ஆலைகளில் பணியாற்றிய சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வழக்கு நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படுகிா என ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில், அதிகாரிகள் ஆலைகளுக்கு சென்று கையூட்டுப் பெறுகின்றனா்.