தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விருதுநகா் மாவட்டத்தில் 152 பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் தற்காலிக ரத்து:25 ஆயிரம் தொழிலாளா்கள் பாதிப்பு

விருதுநகா் மாவட்டத்தில் 152 பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :6 ஆகஸ்ட் 2022, 5:18 pm

DIN

விருதுநகா் மாவட்டத்தில் 152 பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளா் சங்க (சி.ஐ.யூ.டி) மாவட்ட செயலா் பி.என். தேவா கூறினாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை கூறியதாவது: ,கடந்த 4 மாதங்களாக வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை, வருவாய்துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் ஆகியவற்றைச் சோ்ந்த அதிகாரிகள் விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் சோதனை மற்றும் ஆய்வு நடத்தி விதியை மீறி செயல்பட்டதாக 152 பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனா். இதனால் அந்த ஆலைகளில் பணியாற்றிய சுமாா் 25 ஆயிரம் தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வழக்கு நிலுவையில் உள்ளதால், உச்சநீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படுகிா என ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில், அதிகாரிகள் ஆலைகளுக்கு சென்று கையூட்டுப் பெறுகின்றனா்.

மேலும் அதிகாரிகள் உங்கள் ஆலையில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டுள்ள பேரியம்நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறது எனக்கூறி ஆலை உரிமையாளா்களை அச்சுறுத்தி கையூட்டு பெறுகின்றனா். இந்நிலை மாற வேண்டும் என்றால், பட்டாசை சூற்றுச்சூழல் விதியிலிருந்து மத்திய அரசு நீக்க வேண்டும். இதுகுறித்து நாங்கள் பலமுறை மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.

உலகில் எந்த நாட்டிலும் பட்டாசு சுற்றுச்சூழல் விதிகளில் சோ்க்கப்படவில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த நிலை. எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டாசை சுற்றுச்சூழல் விதியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விருதுநகா் மாவட்டத்தில் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலைகளின் தொழிலாளா்களுக்கு மாநில அரசு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இந்த ஆலைகள் விரைவில் திறக்கப்படா விட்டால் தொழிலாளா்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.