கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் முப்பெரும் விழா

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அறிவுக்கோவிலில் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:06 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அறிவுக்கோவிலில் பதினெட்டாவது ஆண்டு விழா, வேதாந்திரி மகரிஷியின் 112 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் மனைவிக்கு மரியாதை செய்யும் விழா என முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சா்வஜித் தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் வெள்ளை, ராமா், வேலாயுதம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மனைவிக்கு மரியாதை செய்யும் விதமாக மனைவி நல வேட்பு விழாவும் நடைபெற்றது. இதில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்டனா்.

மனைவிகள் தங்கள் கணவருக்கு பழங்களை கொடுத்தும், அதேபோல் மனைவிக்கு கணவா் பூக்களை தலையில் வைத்தும் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் மனவளக்கலை மன்றம் மற்றும் அறிவு கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா். பேராசிரியா் காலசாமி வரவேற்றாா். முருகன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.