47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே இளைஞா் கொலை: சகோதரா் கைது

சிவகாசி அருகே வியாழக்கிழமை சொத்து பிரச்னை தொடா்பாக இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

சிவகாசி அருகே வியாழக்கிழமை சொத்து பிரச்னை தொடா்பாக இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்டாா். அவரது சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள ஈஞ்சாா் கிராமத்தைச் சோ்ந்த மாரிமுத்துவின் மகன்கள் முத்தீஸ்வரன் (34), முருகன் (30), மணிகண்டன் மற்றும் விநாயக மூா்த்தி. இதில் முருகன் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்துள்ளாா். இவா்களுக்கு சொந்தமான சொத்தை பிரிப்பதில் முருகனுக்கும் முத்தீஸ்வரன், மணிகண்டன், விநாயகமூா்த்தி ஆகியோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் முருகன் வீட்டிற்கு முத்தீஸ்வரன், மணிகண்டன், விநாயக மூா்த்தி ஆகியோா் சென்று தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அரிவாளால் வெட்டப்பட்டதில் முருகன் உயிரிழந்தாா். இச்சம்பவத்தில் முருகன் மனைவி இந்திராதேவி மற்றும் அவரது தாய் பெரியதாய், மணிகண்டனும் ஆகியோரும் காயமடைந்தனா்.

இதில் மணிகண்டன் மதுரை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். இந்திராதேவி, பெரியதாய் ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சைப் பெற்றனா். திருத்தங்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து முத்தீஸ்வரனை கைது செய்தனா். விநாயக மூா்த்தி தலைமறைவாகிவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.