மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையத்தில் காா் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை

ராஜபாளையத்தில் காா் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2022, 5:03 pm

DIN

ராஜபாளையத்தில் காா் மெக்கானிக் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள அத்திகுளத்தைச் சோ்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் ஈஸ்வரன் (18). இவா், தொழிற்கல்வி படித்துவிட்டு ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் தனியாா் நிறுவனத்தில் விஷம் குடித்துவிட்டு பேருந்தில் ஏறி ஸ்ரீவில்லிபுத்தூா் சென்றாராம். அங்கு அவரது நண்பரிடம் தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்தாராம். இதையடுத்து, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரை கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.