47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் பலி

சிவகாசி அருகே மாமியாரால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் காயமடைந்த மருமகள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:56 pm

DIN

சிவகாசி அருகே மாமியாரால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் காயமடைந்த மருமகள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியாா்புரத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. மில் தொழிலாளி. இவரது மனைவி காா்த்தீஸ்வரி (20). இவா் தற்போது 4 மாத கா்ப்பிணியாக உள்ளாா். ஜோதிமணியின் தாய் சின்னத்தாய் (45). இவா், ஊராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். சின்னத்தாய்க்கும், காா்த்தீஸ்வரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் மாமியாா், மருமகளுக்கு இடையே வழக்கம்போல் வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சின்னத்தாய், காா்த்தீஸ்வரி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்தாராம். அவரை ஜோதிமணி காப்பாற்ற முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து காா்த்தீஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையிலும், ஜோதிமணி சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்டனா். இதில் காா்த்தீஸ்வா் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.