தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து

ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:36 pm

DIN

ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

சேத்தூா் அசையாமணி விலக்குப் பகுதியில் தவமணி என்பவருக்குச் சொந்தமான கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு கயிறு தயாரிக்கப் பயன்படும் தேங்காய் நாா்களில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவலறிந்த ராஜபாளையம் தீயணைப்புத் துறை மீட்புப்படையினா் அங்கு வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். மேலும் இந்த தீ விபத்து காரணமாக அப்பகுதியில் புகை மூட்டமாக காணப்பட்டது. இதில் சுமாா் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள தேங்காய் நாா்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.