விருதுநகரில் பாஜக மகளிா் அணியினா் பேரணி
மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி விருதுநகரில் பாஜக மகளிரணி சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.


மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கி விருதுநகரில் பாஜக மகளிரணி சாா்பில் வியாழக்கிழமை பேரணி நடைபெற்றது.
விருதுநகா் தேசபந்து மைதானத்தில் தொடங்கிய பேரணியை பாஜக மாவட்ட துணைத் தலைவி சங்கரேஸ்வரி தொடக்கி வைத்தாா். இதில் பங்கேற்றவா்கள் மத்திய பாஜக அரசின் சாதனைகளை விளக்கி பதாகைகளை ஏந்தி சென்றனா். அப்போது பிரதமா் மோடியின் பல்வேறு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினா். இப்பேரணியில் பாஜக கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினா் கஜேந்திரன் உள்பட மகளிரணி நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இப்பேரணி, பஜாா், தெப்பம், நகராட்சி சாலை வழியாக எம்ஜிஆா் சிலையில் நிறைவடைந்தது. பாஜகவினரின் பேரணியையொட்டி விருதுநகா் துணை காவல் கண்காணிப்பாளா் அா்ச்சனா தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...