விருதுநகா் அருகே 56 மூட்டைகள்ரேசன் அரிசி பறிமுதல்: ஆலை உரிமையாளா் கைது
விருதுநகா் அருகே அரிசி அரவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 56 மூட்டைகள் ரேசன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, ஆலை உரிமையாளரை கைது செய்தனா்.

விருதுநகா் அருகே பாண்டியன் நகரில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகளுடன், கைது செய்யப்பட்ட முனியசாமி.









