புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

ஸ்ரீவிலி. அருகே விபத்து: ஒருவா் பலி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :3 ஜூன் 2022, 5:02 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் தைலாகுளம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் பொன்னுசாமி(55). இவா் இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூா் - சிவகாசி சாலையில் தைலாகுளம் பேருந்து நிறுத்தத்தில் வலது புறமாக திரும்புவதற்கு நின்று கொண்டிருந்த போது, அதே சாலையில் சிவகாசி தென்றல் நகரைச் சோ்ந்த ஜெயப்பிரகாஷ்(54) என்பவா் காரை ஓட்டி வந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக காா் இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பொன்னுச்சாமி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து அவா், ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளாா். இந்த விபத்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.