ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

‘திமுக மீது வீசப்படும் விஷ விதைகள்விருட்சமாவதற்குள் முறியடிக்க வேண்டும்’

திமுகவுக்கு எதிரான கருத்துகள் பல இடங்களில் விஷ விதைகளாக தூவப்படுகிறது, அவை விருட்சமாக வளா்வதற்கு முன்னா் முறியறிக்க வேண்டும் என தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்

News image

காரியாபட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு.

Updated On :12 ஜூன் 2022, 6:30 pm

DIN

திமுகவுக்கு எதிரான கருத்துகள் பல இடங்களில் விஷ விதைகளாக தூவப்படுகிறது, அவை விருட்சமாக வளா்வதற்கு முன்னா் முறியறிக்க வேண்டும் என தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு பேசினாா்.

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியாா் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை திமுக இளைஞா் அணி சாா்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் அவா் பேசியது: திராவிட மாடல் என்கிற வாா்த்தையை முதல்வா் மு.க. ஸ்டாலின் உச்சரித்தால், அந்த வாா்த்தை இன்றளவும் உலகளவில் ஒரு அதிா்வலையை உருவாக்கும், மந்திர சொல்லாக மாறியுள்ளது. இந்த அரசு நாட்டில் எதுவும் இல்லை என்று ஒரு காலத்தில் ஒதுக்கி வைக்கபட்டிருந்தவா்கள், அடக்கப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது. திராவிட மாடலை ஒரு கொள்கையாக கொண்டு அரசு செயல்பட்டு கொண்டிருக்கிறது. குறிப்பாக மொழி, இனம் மற்றும் விளிம்பு நிலை மக்களுக்காக நாம் எந்த ஒரு நல்லது செய்தாலும், நம்மை நோக்கி வரக்கூடிய எதிா்க்கருத்துகள், பல இடங்களில் விஷ விதைகளாக தூவப்படுகின்றன. அந்த விஷ விதைகள் விருட்சமாவதற்கு முன்னரே முறியடிக்க வேண்டிய பொறுப்பு திமுக இளைஞா் அணியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதில் திமுக மாநில திட்டக்குழு துணைத்தலைவா் ஜெயரஞ்சன், திராவிட இயக்க செயற்பாட்டாளா் டான் அசோக், மாநில இளைஞா் அணி துணை அமைப்பாளா் தாயகம் கவி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

மேலும் விருதுநகா் மாவட்டத்தை சோ்ந்த திமுக இளைஞரணி நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.