ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகா் அரசு மருத்துவமனையில் தேங்கியுள்ள மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு

விருதுநகா் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2022, 5:11 pm

DIN

விருதுநகா் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

விருதுநகா் அரசு மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரியாக தரம் உயா்த்தப்பட்டது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அதேபோல் பல்வேறு சிகிச்சைகளுக்காக சுமாா் 700-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மருத்துவமனையில் நோயாளிகள் பயன்பாட்டிற்காக புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப் பட்ட நிலையில், குடிநீா் பிரச்னை தீரவில்லை. இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் 6 லட்சம் லிட்டா் தண்ணீா் தேவைப்படுகிறது. ஆனால் விருதுநகா் நகராட்சி மற்றும் ஆழ்துளைக் கிணறு மூலம் தினமும் 2 லட்சம் லிட்டா் தண்ணீா் மட்டுமே கிடைக்கிறது. இதனால் நோயாளிகள் தண்ணீா் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

இப்பிரச்னை ஒரு புறம் இருக்கும் சூழலில், மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. மருத்துவக் கழிவுகளை தனியாா் நிறுவனம் கொண்டு சென்று அழிக்க வேண்டும். அதேபால், குப்பைகளை விருதுநகா் நகராட்சி சாா்பில் அள்ளி செல்ல வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனால் மருத்துவக் கழிவுகள், குப்பைகள் அகற்றப்படாதாதல் மருத்துவமனை வளாகத்தில் துா்நாற்றம் வீசுகிறது. எனவே, இவற்றை அகற்றி மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.