ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

News image
Updated On :23 ஜூன் 2022, 5:58 pm

DIN

விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு நகா் குழு உறுப்பினா் சரவணன் தலைமை வகித்தாா். இதில், விருதுநகரில் கடந்த 2020 இல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.380 கோடியில் கட்ட முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடிக்கல் நாட்டினாா். அப்போது இப்பணிகள் 18 மாதங்களில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆட்சியா் அலுவலகம் அருகே நான்கு வழிச் சாலையில் மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஆனால், ராமமூா்த்தி சாலையில் உள்ள மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது. இதனால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே, கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 100 -க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் பணியில் உள்ளனா். ஆனால், ஆய்வகங்களில் 7 போ் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால், ரத்தப் பரிசோதனை உள்பட பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்ள நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, ஆய்வகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பாரா மெடிக்கல் கல்லூரி, பிஎஸ்.சி. நா்சிங் கல்லூரிகளை அமைக்க வேண்டும். விருதுநகா் நகராட்சி நிா்வாகம், மருத்துவமனைக்கு நாள்தோறும் தேவையான 10 லட்சம் லிட்டா் குடிநீரை வழங்க வேண்டும். நாள்தோறும் குப்பைகளை அகற்ற வேண்டும், நோயாளிகள் பயன்பாட்டிற்கு பேட்டரி வாகனம், சக்கர நாற்காலி பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினா். இந்த ஆா்ப்பாட்டத்தில் அக்கட்சியைச் சோ்ந்த மூத்த நிா்வாகிகள் பாலசுப்பிரமணியன், தேனிவசந்தன் மற்றும், நகரச் செயலா் எல்.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.