மாடியில் இருந்து தவறி விழுந்துபெண் தொழிலாளி பலி
ராஜபாளையத்தில் கட்டட வேலை பாா்த்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.


ராஜபாளையத்தில் கட்டட வேலை பாா்த்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மனைவி ஜானகி (65). இவா் கட்டட வேலையில் சித்தாளாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தென்காசி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டட வேலையின் போது ஜானகி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளாா். உடனடியாக அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...