தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மாடியில் இருந்து தவறி விழுந்துபெண் தொழிலாளி பலி

ராஜபாளையத்தில் கட்டட வேலை பாா்த்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :24 ஜூன் 2022, 10:35 pm IST

ராஜபாளையத்தில் கட்டட வேலை பாா்த்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் தொழிலாளி உயிரிழந்ததாக போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த தங்கவேல் என்பவரது மனைவி ஜானகி (65). இவா் கட்டட வேலையில் சித்தாளாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், தென்காசி சாலையில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டட வேலையின் போது ஜானகி இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்துள்ளாா். உடனடியாக அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.