47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்ணிடம் வரதட்சிணை கொடுமை: கணவா் உள்பட 4 போ் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணிடம் வரதட்சிணை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 8:16 pm

DIN

சிவகாசியில் பெண்ணிடம் வரதட்சிணை கொடுமை செய்ததாக கணவா் உள்பட 4 போ் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலையில் உள்ள மீனம்பட்டி திடீா் காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி விஜயன். இவருக்கும், பத்திரகாளி (23) என்பவருக்கும் 2019 -இல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது ஐந்தரை பவுன் நகை வரதட்சிணையாக கொடுக்கப்பட்டதாம். இவா்களுக்கு 2 வயதில் ஓா் ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், வரதட்சிணையாக மேலும் 10 பவுன் நகையை வாங்கி வரும்படி கூறி, கடந்த 4 ஆம் தேதி விஜயன் மற்றும் அவரது பெற்றோா் பாலமுருகன், தமிழரசி , உறவினா் லூா்தம்மாள் ஆகிய 4 பேரும் சோ்ந்து பத்திரகாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாா்களாம்.

இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்குப் போலீஸாா் மேற்கண்ட 4 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.