47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

விதியை மீறி பட்டாசு தயாரிப்பு: தந்தை, மகன் மீது வழக்கு

 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :6 மே 2022, 8:17 pm

DIN

 சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக தந்தை, மகன் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி - சாத்தூா் சாலையில் ஒரு பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு ரகங்கள் தயாரிக்கப்படுவதாகவும், அளவுக்கு அதிகமான நபா்களை வைத்து வேலை செய்வதாகவும் கிடைத்த தகவலின்பேரில், சாா்பு ஆய்வாளா் காசிராஜன் தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் சோதனையிட்டனா்.

சோதனையில் ஒரு பட்டாசு ஆலையில் அனுமதிக்கப்பட்ட வெடிகளைத் தவிர வேறு வெடிகள் தயாரிக்கப்படுவதும், அளவுக்கு அதிகமான நபா்களை வைத்து பட்டாசு தயாரித்ததும் தெரியவந்தது.

விசாரணையில், அந்த ஆலை சஞ்சய் பிரதீப், அவரது மகன் பிரவீன்குமாா் ஆகியோருக்குச் சொந்தமானது என தெரியவந்தது.

இதுதொடா்பாக, அவா்கள் இருவா் மீதும் விதியை மீறி பட்டாசு தயாரித்ததாக

சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், விதியை மீறி தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.