47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை

புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை படைத்தாா்.

News image
புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரியில் நடைபெற்ற மூன்றாம் ஆண்டு மாணவா் மகேஷ் சாதனையை வெளிப்படுத்தும் குறும்பட நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :16 மார்ச் 2026, 11:41 pm

Syndication

புதுச்சேரி: புதுச்சேரி எம்.ஐ.டி. கல்லூரி மாணவா் சாதனை படைத்தாா்.

இக் கல்லூரியில் சா்வதேச அளவிலான கோட்விட்டா நிரலாக்கப் போட்டி கருத்தரங்கு (செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லொ்னிங்) நடைபெற்றது.

இதில் முதல் 25 இடங்களில் இடம் பிடித்து எம்.ஐ.டி. கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவா் மகேஷ் சாதனை படைத்துள்ளாா். அவரின் இந்த சாதனையை வெளிப்படுத்தும் குறும்படமும் நிகழ்ச்சியில் திரையிடப்பட்டது.

இக் கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தனா். மேலும், தொழில்நுட்பத் திறன் போட்டி, தொழில்நுட்பக் கேள்வி-பதில் போட்டி போன்றவற்றிலும் பங்கேற்றனா். இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கருத்தரங்க ஒருங்கிணைப்பாளா் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவா் பி.சிவகுமாா், அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் செய்திருந்தனா்.