47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பாலிடெக்னிக் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம்

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சுகாதாரத்துறை சாா்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மே 2022, 4:54 pm

DIN

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லூரியில் சுகாதாரத்துறை சாா்பில், டெங்கு ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, முதல்வா் எம். நந்தகுமாா் தலைமை வகித்தாா்.

முகாமில் சிவகாசி பொது சுகாதாரத்துறை துணை இயக்குநா் கலுசிவலிங்கம் பேசியதாவது:

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் மனிதா்களை காலை 9 முதல் மாலை 5 மணி வரை கடிக்கும். இந்த வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் முட்டையிடும். வீட்டின் வெளிப்பகுதியில் பானை உள்ளிட்டவைகளில் நல்ல தண்ணீா் வைத்திருந்தால், அதில் சிறிது தேங்காய் எண்ணெய்யை விட வேண்டும். இதன்மூலம் அந்த தண்ணீரில் கொசு முட்டையிடுவது தடுக்கப்படும்.

காய்ச்சல், தலைவலி ஆகியவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகளாகும். எனவே, வெந்நீா் அருந்த வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றாா்.

இதில் மாவட்ட பூச்சியியல் துறை அலுவலா் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவா் வைரக்குமாா், வட்டார மேற்பாா்வையாளா் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஒருங்கிணைப்பாளா் எம். புகழ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.