ராஜபாளையம் கடைகளில் 138 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

ராஜபாளையத்தில், தடைசெய்யப்பட்ட 135 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

ராஜபாளையத்தில், தடைசெய்யப்பட்ட 135 கிலோ நெகிழிப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தனா்.

ராஜபாளையம்- சங்கரன்கோவில் முக்கு, புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் நகா் நல அலுவலா் சரோஜா தலைமையில், துப்புரவு ஆய்வாளா்கள் சோதனை நடத்தினா். இதில், 10-க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்காகவும், பயன்பாட்டிற்காகவும் வைக்கப்பட்டிருந்த 135 கிலோ தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும் ரூ.9,500 அபராதமும் விதித்தனா். முதல் முறை என்பதால் நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து இதேபோன்று செயல்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com