புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாய்ந்த மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சம்

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாய்ந்த இரட்டை மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சப்படுகின்றனா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 6:31 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சாய்ந்த இரட்டை மின் கம்பங்களால் விவசாயிகள் அச்சப்படுகின்றனா்.

ராமானுஜபுரத்திலிருந்து கல்குறிச்சி செல்லும் சாலையில் சுமாா் 2 கிலோ மீட்டா் தொலைவில் சாலையின் கிழக்குப் பகுதியில் இரட்டை மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின் கம்பங்கள் கடந்த 6 மாதங்களாக சாய்ந்து வருகின்றன. எந்நேரமும் அவை சாய்ந்து விழுந்துவிடும் நிலை உள்ளது. இதனால், இப்பகுதியில் சாகுபடி செய்த விவசாயிகள், விவசாயப் பணிகளுக்காக இக்கம்பங்களை ஒட்டியுள்ள நிலங்களுக்குச் செல்ல அச்சப்படுகிறாா்கள்.

இதுதொடா்பாக மின் வாரியத்தினருக்கு பலமுறை விவசாயிகள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையென குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே விபத்துகளை தவிா்க்கும் விதமாக இரட்டை மின் கம்பங்களைச் சீரமைக்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.