நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை

 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:18 pm

DIN

 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞா்கள் இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் பகுதியைச் சோ்ந்த புல்லட் என்கிற பால்பாண்டி (21). வா்ணம் பூசும் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த திருக்குமரன் (20). பொறியியல் பட்டதாரி. இவா்கள் இருவரும், கடந்த 2015-ஆம் ஆண்டு அதே பகுதியில் உள்ள 14-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனா். இது தொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பால்பாண்டி, திருக்குமரனை விருதுநகா் அனைத்து மகளிா் காவல் நிலையப் போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில், வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கிய மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி பூா்ணஜெயஆனந்த், பால்பாண்டி, திருக்குமரன் இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம்  அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.