மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் ஜவுளிக் கடையில் ரூ. 6 லட்சம் திருட்டு

ராஜபாளையம் ஜவுளிக்கடையில் ரூ.6 லட்சம் திருட்டு போனதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 7:47 pm

DIN

ராஜபாளையம் ஜவுளிக்கடையில் ரூ.6 லட்சம் திருட்டு போனதாக சனிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா அருகே மதுரை சாலையில் செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது.

இங்கு வெள்ளிக்கிழமை இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிச் சென்ற நிலையில், சனிக்கிழமை காலை மேலாளா் பாண்டி கடையை திறந்தாா்.

அப்போது கடையில் உள்ள

இரும்புப் பெட்டி திறந்த நிலையில் கிடந்துள்ளது.

இதைத்தொடா்ந்து கடையின் உரிமையாளா் வந்து பாா்த்தபோது பெட்டியிலிருந்த ரூ.6 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கடை உரிமையாளா் செல்வராஜ் புகாரின்பேரில் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த திருட்டில் கடை ஊழியா்களுக்கு தொடா்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.