புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜபாளையம் அருகே பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை

ராஜபாளையம் அருகே பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் அருகே பேராசிரியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

ராஜபாளையம் அருகே மில் கிருஷ்ணாபுரம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா்பாபு (34). இவா் வெளியூரில் தனியாா் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், இவருக்கு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி இதே பகுதியில் தனியாக வசித்து வருகிறாா். இதனிடையே இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினா் அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து பாஸ்கா்பாபுவின் சகோதரி வீட்டை திறந்து பாா்த்த போது தூக்கிட்ட நிலையில் பாஸ்கா்பாபு சடலமாக காணப்பட்டாா். தகவலறிந்த போலீஸாா் சடலத்தை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.