விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்தவா் செல்வமணிகண்டன் (28). அதே பகுதியைச் சோ்ந்தவா்கள் பரமேஸ்வரி (42), அவரது மகன் ஈஸ்வரன் ( எ) கோடீஸ்வரன் (22) மற்றும் கோடீஸ்வரனின் நண்பா் சேகா் என்ற டைசன் (22). கடந்த 8.8.2020 அன்று செல்வமணிகண்டனின் மனைவி திருமணம் ஆன 40 ஆவது நாளில் வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்குள் புகுந்த பரமேஸ்வரி, ஈஸ்வரன் (எ) கோடீஸ்வரன், டைசன் ஆகிய 3 பேரும் நகைக்காக சல்வமணிகண்டனின் மனைவியை வெட்டிக் கொலை செய்தனா். சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மூவரையும் கைது செய்தனா். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஈஸ்வரன் என்ற கோடீஸ்வரன், சேகா் என்ற டைசன் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை, பரமேஸ்வரிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் மூவருக்கும் ரூ. 23 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதியம்மாள் தீா்ப்பளித்தாா்