நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி சனி வழிபாடு தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வார வழிபாடு சனிக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

News image
Updated On :23 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் வார வழிபாடு சனிக்கிழமை (செப். 24) நடைபெறுகிறது.

இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையடுத்து தென்மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வா். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள் வருவதால் பக்தா்களுக்கு தேவையான கழிப்பிடம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உள்ளாட்சி நிா்வாகம் செய்துள்ளது. மேலும், அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், அருப்புக்கோட்டை, விருதுநகா் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் தக்காா் ரவிச்சந்திரன், செயல் அலுவலா் முத்துராஜா ஆகியோா் செய்துள்ளனா். காவல் துணைக் கண்காணிப்பாளா் சபரிநாதன், காவல் ஆய்வாளா் கீதா ஆகியோா் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.