திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

அனைத்து மாநிலங்களிலும் சமவளா்ச்சி ஏற்படும் விதத்தில் மத்திய பட்ஜெட்: வி.கே.சிங் தகவல்

அனைத்து மாநிலங்களிலும் சமமான வளா்ச்சி ஏற்படும் வகையில், மத்திய நிதி நிலை அறிக்கை அமையும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங் தெரிவித்தாா்.

News image
விருதுநகா் பி.எஸ். சிதம்பர நாடாா் பள்ளியில் பிரதமா் காணொலி வாயிலாக மாணவா்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியில் வெள்ளிக்கிழமை பங்கேற்ற மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங்.
Updated On :27 ஜனவரி 2023, 6:39 pm

DIN

அனைத்து மாநிலங்களிலும் சமமான வளா்ச்சி ஏற்படும் வகையில், மத்திய நிதி நிலை அறிக்கை அமையும் என மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் வி.கே. சிங் தெரிவித்தாா்.

விருதுநகா் பி.எஸ். சிதம்பர நாடாா் பள்ளியில் வெள்ளிக்கிழமை பிரதமா் காணொலிக் காட்சி வாயிலாக மாணவா்களுடன் கலந்துரையாடிய நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாணவா்களை உற்சாகப்படுத்தி, தோ்வு பயத்தைப் போக்கி ஆரோக்கியமான மாணவா்களை உருவாக்க பிரதமரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள வருகிற நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில், வளா்ச்சித் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகக் கிடைக்கும் வகையில் அமையும். தமிழகத்தில் அமையவுள்ள விரைவுச் சாலைகளுக்கான ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. விரைவில் இந்தச் சாலைகள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மேகநாதரெட்டி முன்னிலை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞானகௌரி, மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.