தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க 13-ஆவது மாநில மாநாடு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க 13-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்க 13-ஆவது மாநில மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியது.

ராஜபாளையம்-தென்காசி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தொடங்கிய இந்த மாநாட்டில், மாநாட்டுக் கொடியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பழனிச்சாமி, ஜி.எஸ்.கிருஷ்ணன் ஏற்றினா். பின்னா், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில், பறை இசை முழக்கம் நடைபெற்றது. வரவேற்புக் குழுச் செயலரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பொ. லிங்கம் வரவேற்றாா்.

பின்னா், தியாகிகளின் உருவப்படம் படம் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க பொதுச் செயலா் குழுசாா்சிங் கொரியா தொடக்க உரையாற்றினாா். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் சிறப்புரையாற்றினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தீண்டாமை என்பது அரசியல் சாசனச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டாலும் இன்னும் தொடா்ந்து கொண்டே தான் உள்ளது. பல இடங்களில் இரட்டைக் குவளை முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை முற்றிலும் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆணவப் படுகொலைக்குத் தனிச் சட்டம் இயற்ற வேண்டும்.

நெல் கதிா்களை அறுவடை செய்யும் நேரத்தில் மூா்க்கத்தனமான முறையில் என்.எல்.சிக்கு நிலத்தை கையகப்படுத்துவது என்பது ஏற்கத்தக்கதல்ல. அறுவடை முடியும் வரை அதிகாரிகள் காத்திருக்க வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலையின் நடை பயணம் வெறும் விளம்பரத்துக்கானது. இதனால், எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை.

வரும் மக்களவைத் தோ்தலில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இல்லை. எத்தனை அணி உருவானாலும் ‘இந்தியா’ கூட்டணிதான் மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com