நடைமேடையை அகற்றக் கோரி சாலை மறியல்: 17 போ் கைது

ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல்
Updated on
1 min read

ராஜபாளையம் அருகே புனல்வேலி பேருந்து நிறுத்தத்தில் இனாம்கோவில்பட்டி சாலையில் விபத்துக்கு காரணமாக உள்ள நடைமேடையை அகற்றக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

புனல்வேலி கிளை செயலா் ராமகுரு தலைமை வகித்தாா். புத்தூா் கிளை செயலா் சின்னமுத்து, மீனாட்சியாபுரம் கிளைச் செயலா் மலைக்கனிராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட செயற்குழு உறுப்பினா் குருசாமி, மாவட்ட குழு உறுப்பினா் ராமா், மேற்கு ஒன்றியச் செயலா் சந்தனகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சாலை மறியலில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 17 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com