மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ.94.34! 6 காசுகள் உயர்வு!

தொடக்கத்தில், ஏற்றம் கண்ட பெரும்பகுதியை ரூபாய் இழந்தது, இறுதியில் 6 காசுகள் உயர்வுடன் ரூ. 94.34 ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய்

Published On :

மும்பை: டாலர் குறியீடு வலுவடைந்ததாலும், கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தது, முதலீட்டாளர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியதால், இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில், ஏற்றம் கண்ட பெரும்பகுதியை ரூபாய் இழந்தது, இறுதியில் 6 காசுகள் உயர்வுடன் ரூ. 94.34 ஆக நிலைபெற்றது.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் வேகம் பெறும் என்ற நம்பிக்கையால் ரூபாய் மதிப்பு நேர்மறையான போக்கில் தொடங்கியதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.30 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி பிறகு ரூ. 94.20 முதல் ரூ. 94.52 வரையிலான வரம்பில் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. இறுதியில், முந்தைய நாள் நிலையை விட 6 காசுகள் உயர்ந்து ரூ. 94.34 ஆக நிலைபெற்றது.

நேற்று (வியாழக்கிழமை) டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து ரூ. 94.40 ஆக நிலைபெற்றது.

Summary

The rupee pared most of its initial gains and settled for the day higher by just 6 paise.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.