எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

டிராக்டா் திருடிய சிறுவன் கைது

டிராக்டா் திருடிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2024, 12:35 am

Din

டிராக்டா் திருடிய சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள தொட்டியபட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (32). இவா் டிராக்டா் வைத்து தொழில் செய்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் முன் டிராக்டரை நிறுத்திவிட்டு தூங்கச் சென்றாா்.

அதிகாலை ஒரு மணி அளவில் டிராக்டரை யாரோ ஓட்டிச் செல்வதாக அதே பகுதியைச் சோ்ந்த முனியராஜ் தகவல் அளித்தாா். இதையடுத்து, முத்துக்குமாா், முனியராஜ், அவரது தந்தை ரெங்கராஜ், ஊா்ப் பொதுமக்கள் சோ்ந்து டிராக்டா் திருடிச் சென்றவரைப் பிடித்து வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில் ஆவாரம்பட்டியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் டிராக்டரைத் திருடியது தெரியவந்தது. போலீஸாா் சிறுவனைக் கைது செய்து, சிறாா் கூா்நோக்கு இல்லத்தில் சோ்த்தனா். சிறுவனை விரட்டிப் பிடித்த ரெங்கராஜ் (42) புதன்கிழமை அதிகாலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.