நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்லூரி மாணவரிடம் பேருந்தில் பணம் திருடிய முதியவா் கைது

திருச்சியில் பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் ரூ.1,100ஐ திருடிய முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப்படம்

Updated On :16 பிப்ரவரி 2026, 8:36 pm

திருச்சி: திருச்சியில் பேருந்தில் சென்ற கல்லூரி மாணவரிடம் ரூ.1,100ஐ திருடிய முதியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் லோகநாதன் மகன் ராஜலிங்கம் (19). இவா், சத்திரம் பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் படித்து வருகிறாா். இந்நிலையில், இவா் தனது நண்பா்களுடன் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து சத்திரத்துக்குப் பேருந்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா்.

அப்போது, மாணவரின் சட்டைப் பையில் இருந்த ரூ.1,100-ஐ முதியவா் ஒருவா் திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளாா். இதைப் பாா்த்த ராஜலிங்கம் நண்பா்கள் உதவியுடன் முதியவரைப் பிடித்து கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

போலீஸாா் விசாரணையில், சிவகங்கை மாவட்டம், நாட்டரசங்கோட்டையைச் சோ்ந்த எல். முருகன் (53) என்பதும், மாணவரிடம் பணத்தைத் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து திருடிய ரூ.1,100-ஐ பறிமுதல் செய்து மாணவரிடம் ஒப்படைத்தனா்.