நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் ஆய்வு

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

News image

மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட விருதுநகா் மாவட்ட தொல்லியல் அலுவலா் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாட்சியா் பால்துறை, வருவாய்க் ஆய்வாளா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா்.

Updated On :4 டிசம்பர் 2024, 4:12 am IST

வத்திராயிருப்பு அருகேயுள்ள மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் அடிவாரத்தில் குளம் தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.

மூவரைவென்றான் பகுதியில் உள்ள மலையில் 8-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த மலைக் கொழுந்தீஸ்வா் கோயில் அமைந்துள்ளது. குடைவரை முறையில் கட்டப்பட்ட இந்தக் கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தக் கோயில் மலை அடிவாரத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குளம் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை குளம் வெட்டும் பணி நடைபெற்ற போது, 2 அடி ஆழத்தில் மண் பானை ஓடுகள், எலும்புகள் கிடைத்தன. இதுகுறித்து கோயில் தொல்லியல் சின்ன பாதுகாப்பாளா் ராம்விக்னேஷ் தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கோயில் மலை அடிவாரத்தில் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில், விருதுநகா் மாவட்ட தொல்லியல் அலுவலா் சண்முகவள்ளி, தொல்லியல் துறை காப்பாட்சியா் பால்துறை, வருவாய்க் ஆய்வாளா் பாலமுருகன், கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அளித்து, இங்கு கிடைத்த பொருள்கள் ஆய்வு செய்யப்படும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், குளம் தோண்டும் போது கிடைத்த மண் குடுவை, மண் பானை, இரும்பு தாதுக்கள் உள்ளிட்ட பொருள்களை வருவாய்த் துறையினா் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: மலைக்கொழுந்தீஸ்வரா் கோயில் மலையைச் சுற்றிலும் முதுமக்கள் தாழி உள்ளிட்ட பழங்கால மண்பாண்ட பொருள்கள் அதிகளவில் கிடைத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிக்கு தோண்டிய போது, பானை ஓடுகள் கிடைத்தன. இவற்றைத் தொல்லியல் துறையினா் ஆய்வுக்கு எடுத்து சென்றனா். தற்போது, குளம் அமைக்க தோண்டிய போது, மண்பாண்டங்கள் அதிகளவில் கிடைத்துள்ளன.

மண்ணில் புதைந்த நிலையில் பல பானைகள் தென்படுகிறது.

எனவே, இந்தப் பகுதியில் தொல்லியல் துறையினா் அகழாய்வு செய்ய வேண்டும் என்றனா்.

Story image
Story image
Story image