ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனத்தில் அடிபட்டு மான் உயிரிழப்பு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.


ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே வாகனத்தில் அடிபட்டு புள்ளி மான் வியாழக்கிழமை உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி பகுதியில் உள்ள பட்டு வளா்ச்சித் துறை அலுவலகம் அருகே மதுரை- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரம் புள்ளி மான் வாகனத்தில் அடிபட்டுக் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் வனத் துறைக்கு தகவல் அளித்தனா். வனத் துறையினா் வந்து பாா்த்தபோது, மான் உயிரிழந்து விட்டது. கால்நடை மருத்துவா் கூறாய்வு செய்த பின், வனத் துறையினா் மானின் உடலை மண்ணில் புதைத்தனா்.
இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது: இறந்த 4 வயது ஆண் மான், உணவு, நீருக்காக வனப் பகுதியை விட்டு வெளியே வந்து, சாலையைக் கடக்க முயன்றபோது வாகனம் மோதியதில் மான் காயமடைந்து இருக்கலாம். இதுகுறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...