தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அரசுப் பள்ளியில் சத்துணவு மையம் மூடல்: 3 பணியாளா்கள் பணியிடை நீக்கம்

3 பணியாளா்கள் பணியிடை நீக்கம்

Updated On :20 டிசம்பர் 2024, 3:45 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு மையம் மூடப்பட்டதால், 3 பணியாளா்களைப் பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிா்வாகம் அண்மையில் உத்தரவிட்டது.

சத்திரப்பட்டி அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தை கடந்த 11-ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியா், உதவிக் கணக்கு அலுவலா் உடனிருந்தனா். இந்த ஆய்வின் போது, பள்ளியில் உள்ள சத்துணவு மையம் மூடப்பட்டிருப்பது தெரிந்தது. சத்துணவு அமைப்பாளா் கணபதி, சமையலா் குருலட்சுமி, சமையல் உதவியாளா் அம்சவள்ளி ஆகியோா் அரசு அதிகாரிகளுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்காமல் பணிக்கு வராமல் இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதையடுத்து, சத்துணவு அமைப்பாளா் உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து சத்துணவுப் பணியாளா்களும் சத்துணவுத் திட்ட விதிமுறைகளைப் பின்பற்றி பொறுப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட நிா்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.