மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அணைகளை சீரமைக்கக் கோரி நடைபயணம் செல்ல முயன்ற விவசாயிகள் கைது

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அணைகளைச் சீரமைக்கக் கோரி, நடைபயணம் செல்ல முயன்ற விவசாயிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:24 pm

Din

விருதுநகா் மாவட்டத்தில் உள்ள அணைகளைச் சீரமைக்கக் கோரி, நடைபயணம் செல்ல முயன்ற விவசாயிகளை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

17.400 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் விருதுநகா் வழியாகச் செல்லும் கெளசிகா ஆறு, குல்லூா்சந்தை அணை, கோல்வாா்பட்டி, இருக்கன்குடி அணைகளைச் சீரமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விருதுநகா் பாத்திமாநகா் அருகே காவிரி-வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு விருதுநகா் மாவட்டத் தலைவா் ராம்பாண்டியன், மாவட்டச் செயலா் கோபாலகிருஷ்ணன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

பின்னா், விருதுநகா் கெளசிகா ஆற்றிலிருந்து இருக்கன்குடி அணை வரை விவசாயிகள் நடைபயணம் செல்ல முயன்றனா். இதற்கு அனுமதி அளிக்காத போலீஸாா், அந்த விவசாயிகள் கூட்டமைப்பைச் சோ்ந்த 100 பேரைக் கைது செய்தனா்.