மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம்! மனைவி, 5 குழந்தைகளை வெட்டிக் கொன்ற கணவன் கைது!

கணவனின் சந்தேகத்தால் மனைவி, 5 குழந்தைகள் ஆணவப் படுகொலை!

News image
Updated On :16 மார்ச் 2026, 1:02 pm

இணையதளச் செய்திப் பிரிவு

காதலனுடன் தப்பிச் செல்ல ரகசிய திட்டம் தீட்டியதாக தமது மனைவி மீதான சந்தேகத்தால் அவருடன் சேர்த்து தமது குழந்தைகளையும் கோடாரியால் வெட்டிக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது.

லாகூர் நகரிலிருந்து சுமார் 200 கி.மீ. தொலைவிலுள்ள சார்கோதா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) நள்ளிரவில் தமது ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெட்டி ஆணவப் படுகொலை செய்திருக்கிறார் முகமது யாசீன் என்ற நபர்.

முகமது யாசீனின் மனைவிக்கு(45) வேறொரு ஆணுடன் தொடர்பிருந்ததாகக் கூறப்படுகிறது. அந்த நபருடன் அவர் தப்பிச் செல்ல திட்டமிட்டதாக முகமது யாசீனுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, அவரது மனைவிக்கு பிறந்த 5 குழந்தைகளுக்கும் அந்த நபரே தந்தையாக இருக்கக்கூடுமோ என்ற உள்ளுணர்வும் முகமது யாசீனை நெடுங்காலமாக உறுத்தி வந்திருக்கிறது. இதையடுத்து, அவர்கள் அனைவரையும் கொல்ல அவர் முடிவெடுத்தார்.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் வீட்டில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த தமது மனைவி, 15 வயது மகள் மற்றும் 4 மகன்களையும் சரமாரியாகக் கோடாரியால் வெட்டிக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முற்பட்டார். இந்நிலையில், அவர் உயிர் பிழைத்த நிலையில், காவல் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் பெண்கள் ஆணவப் படுகொலை செய்யப்படுவதாக மனித உரிமைகள் அமைப்புகளின் தரவுகளிலிருந்து தெரிய வருகிறது. எனினும், அது குறித்த வழக்குகள் அதிகம் பதியப்படாமல் நீர்த்துப்போகச் செய்வதும் காலங்காலமாக அங்குள்ள குடும்பங்களில் கடைபிடிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.

summary

A Pakistani man on Monday axed to death his wife and five children in the name of "honour" in the Punjab province of the country, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.