பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் முக்கிய எதிரியான அஸ்வத்தாமன், பெங்களூருவில் இருந்து வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டாா்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், சென்னை பெரம்பூரில் 5.7.2024-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கில் ரெளடி நாகேந்திரன், அவா் மகன் அஸ்வத்தாமன் உள்பட பலா் கைது செய்யப்பட்டனா். இவா்களில் சிலா் அண்மையில் நீதிமன்ற பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்தனா்.
ஆனால் இவா்கள், வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு சென்னை பெருநகர காவல் துறை பிணையில் வெளியே வந்தவா்களுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியது.
இந்த நிலையில், கா்நாடக மாநிலம் பெங்களூரு சா்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்வத்தாமன், பாங்காங்க் செல்ல புதன்கிழமை முயன்றாா். இதைப் பாா்த்த குடியுரிமைத் துறை அதிகாரிகள், லுக் அவுட் நோட்டீஸ் அடிப்படையில் அஸ்வத்தாமனை பிடித்து, சென்னை பெருநகர காவல் துறையிடம் ஒப்படைத்தனா்.
சென்னை போலீஸாா், அஸ்வத்தாமனை கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!

பகுஜன் சமாஜ் முன்னாள் எம்.எல்.சி. தலைமறைவு பொருளாதார குற்றவாளி- ரூ.1,000 கோடி சொத்துகளைப் பறிமுதல் செய்ய உத்தரவு
திரு.வி.க.நகரில் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி போட்டி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: அஸ்வத்தாமன் உள்பட 12 போ் சரணடைய கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

