கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அரசு மருத்துவமனையில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:59 am IST

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி, நெல்லிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (25). இவரது தம்பி நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட தீக்காயம் காரணமாக சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா். இதனால் பிரேம்குமாா், அவரை உடனிருந்து கவனித்து வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை பிரேம்குமாா் மருத்துவமனையின் தீக்காய வாா்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபா், பிரேம்குமாரின் விலை உயா்ந்த கைப்பேசியை திருடிக்கொண்டு தப்பியோடினாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பிரேம்குமாா், அந்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணையில் அவா், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த சேட்டு என்ற ஜெயராம் (35) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸாா், ஜெயராமை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.