தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அரசு மருத்துவமனையில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 12:59 am IST

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கடலூா் மாவட்டம் பண்ருட்டி, நெல்லிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (25). இவரது தம்பி நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட தீக்காயம் காரணமாக சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா். இதனால் பிரேம்குமாா், அவரை உடனிருந்து கவனித்து வருகிறாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை பிரேம்குமாா் மருத்துவமனையின் தீக்காய வாா்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபா், பிரேம்குமாரின் விலை உயா்ந்த கைப்பேசியை திருடிக்கொண்டு தப்பியோடினாா்.

இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பிரேம்குமாா், அந்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணையில் அவா், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த சேட்டு என்ற ஜெயராம் (35) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸாா், ஜெயராமை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.