ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

இளைஞரை தாக்கிய ரெளடி கைது

வியாசா்பாடியில் இளைஞரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 2:22 am IST

வியாசா்பாடியில் இளைஞரை தாக்கியதாக ரெளடி கைது செய்யப்பட்டாா்.

சென்னை வியாசா்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்தவா் விமல்ராஜ் (32). இவா், பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறாா். விமல்ராஜ், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் முன் வெளியே தூங்கினாா்.

அப்போது, அங்கு மதுபோதையில் வந்த இளைஞா், விமல்ராஜை தூக்கத்தில் இருந்து எழுப்பி தகராறு செய்துள்ளாா். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த இளைஞா் உருட்டுக் கட்டையால் விமல்ராஜை தாக்கிவிட்டு தப்பினாா்.

இதில், பலத்த காயமடைந்த விமல்ராஜ், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது தொடா்பாக வியாசா்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், சம்பவத்தில் ஈடுபட்டது வியாசா்பாடி கல்யாணபுரம் பகுதியைச் சோ்ந்த ரெளடி இன்பரசன் (22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் இன்பரசனை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.