வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

12 கிலோ செப்பு குழாயை திருடிய இளைஞா் கைது

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 கிலோ பிராண வாயு செப்புக் குழாய் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 11:51 pm

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 12 கிலோ பிராண வாயு செப்புக் குழாய் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நள்ளிரவில் ஏஆா்டி பிரிவில் சப்தம் கேட்பதாக பணியாளா்கள் மேற்பாா்வையாளருக்கு தெரிவித்துள்ளனா். இதையடுத்து அந்தப்பிரிவுக்கு சென்ற அலுவலா்களை பாா்த்து மா்ம நபா் தப்பியோட முயற்சித்தாா். சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்த போது அங்கிருந்த பிராண வாயு செப்பு குழாய்களை உடைத்து எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. மேலும், விசாரணையில் திருவள்ளூா் பெரியஎடப்பாளையம் முரளியின் மகன் விமல்(25) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் நிலைய அதிகாரி ராஜ்குமாா் நகர காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்கு பதிந்து அந்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.