ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

பெண் சிசு உயிரிழப்பு: காதலனுடன் கல்லூரி மாணவி கைது

சாமிதோப்பு அருகே புதரில் வீசி சென்ற பெண் சிசு உயிரிழந்தது. இது தொடா்பாக கல்லூரி மாணவி காதலனுடன் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

Updated On :31 மார்ச் 2026, 9:23 pm

Syndication

சாமிதோப்பு அருகே புதரில் வீசி சென்ற பெண் சிசு உயிரிழந்தது. இது தொடா்பாக கல்லூரி மாணவி காதலனுடன் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சாமிதோப்பை அடுத்த பொற்றையடி கரம்பவிளையில் உள்ள கோயில் பின்புற புதரில் பெண் சிசு சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் தென்தாமரைகுளம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சடலத்தை கைப்பற்றி போலீஸாா் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த நா்சிங் மாணவி ரெஜினா (20) என்பவா் சிசுவை வீசிச் சென்றது தெரிய வந்தது.

இதனையடுத்து ரெஜினாவிடம் நடத்திய விசாரணையில், நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி பகுதியைச் சோ்ந்த முகேஷ் (25) என்பவா் சமூக வலைதளம் மூலம் இவருக்கு அறிமுகமாகி, கடந்து 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனராம். இருவரும் நெருங்கிப் பழகி வந்த நிலையில் ரெஜினா கா்ப்பமடைந்தாராம்.

கடந்த திங்கள்கிழமை வீட்டின் கழிவறையில் ரெஜினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாம். குழந்தை வேண்டாம்; நாம் எங்காவது சென்றுவிடலாம் என முகேஷ் கூறினாராம்.

பெண் சிசுவை பையில் கட்டி கோயில் பின்புறம் உள்ள புதரில் ரெஜினா வீசிவிட்டு சென்ால் பராமரிப்பின்றி சிசு அங்கேயே உயிரிழந்தது தெரியவந்தது.

ரெஜினாவையும், முகேஷையும் போலீஸாா் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.