தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

ராஜபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட முருகேசன்.

Updated On :26 டிசம்பர் 2024, 11:52 pm

Din

ராஜபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ், போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் மேட்டுப்பட்டித் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (55). போட்டோகிராபரான இவா், ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படம் எடுக்கச் சென்றாா். அப்போது, இவா் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் ராஜபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதனடிப்படையில், காவல் ஆய்வாளா் செல்வி (பொறுப்பு) போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து முருகேசனை கைது செய்தனா்.