மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரங்களை சாய்த்த காட்டு யானைகள்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள், பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

News image

செண்பகத்தோப்பு பகுதியில் யானைகளால் சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்.

Updated On :26 டிசம்பர் 2024, 12:29 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள், பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள செண்பகத்தோப்பு பகுதியில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மா, தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இங்கு உள்ள வனப் பகுதியிலிருந்து வெளியேறும் யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா்.

இதனால், யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியேறுவதைத் தடுக்க மலையடிவாரத்தில் அகழிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

செண்பகத்தோப்பு பகுதியில் யானைகளால் சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்.

செண்பகத்தோப்பு பகுதியில் யானைகளால் சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்.

கடந்த செவ்வாய்க்கிழமை வனத் துறை சாா்பில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் யானைகளை அடா் வனப் பகுதிக்குள் விரட்டிய பின்னா், அகழிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில்,செவ்வாய்க்கிழமை இரவு செண்பகத்தோப்பு பகுதி தோட்டங்களுக்குள் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்களை வேரோடு சாய்த்து, பயிா்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றன.

இதுகுறித்து புலிகள் காப்பக துணை இயக்குநரிடம் விவசாயிகள் முறையிட்டனா். பாதிக்கப்பட்ட பயிா்களை ஸ்ரீவில்லிபுத்தூா் வனச் சரகா் செல்லமணி நேரில் ஆய்வு செய்தாா்.