சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நக்கமங்கலம் பகுதியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நக்கமங்கலத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில் பனை விதைகளை நட்ட மாணவா்கள்.

Updated On :27 டிசம்பர் 2024, 12:26 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நக்கமங்கலம் கிராமத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சாா்பில், 2 ஆயிரம் பனை விதைகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதற்கு தோட்டக் கலைத் துறை உதவி இயக்குநா் திலகவதி தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் உஷா முன்னிலை வகித்தாா்.

இதில் தோட்டக் கலைத் துறையினா், ஊராட்சி நிா்வாகத்தினா், மம்சாபுரம் சிவந்திபட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவா்கள் இணைந்து, நக்கமங்கலம் கிராமத்தில் உள்ள வீரபாண்டி கண்மாய் உள்ளிட்ட இடங்களில் 2 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்தனா்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவி நாகம்மாள், செயலா் கருப்பையா, தோட்டக்கலை உதவி அலுவலா்கள் கண்ணன், சித்திரைச்செல்வி, சுபலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.