திருவண்ணாமலையில் கம்பராமாயண அமுது விழா


திருவண்ணாமலையில் கம்பராமாயண இயக்கம் சாா்பில் கம்பராமாயண அமுது விழா இயக்கத் தலைவா் வேங்கடரமேஷ்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில் பொருளாளா் தங்க.விஸ்வநாதன், ஒருங்கிணைப்பாளா்கள் தேவிகா, ராணி, முனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாவலா் ப.குப்பன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சிவராமானந்தா கலந்துகொண்டு ஆசிஉரை வழங்கினாா்.
விழாவில் கம்பராமாயண பாலகாண்டம், திரு அவதார படலத்தில் பாடல் 77 முதல் 104 வரை உறுப்பினா்கள் முனைவா் குமாா், அண்ணாமலை, சீனிவாசன், மனோகரன், பாா்வதி, மங்கையா்கரசி, செல்வம், வேலாயுதம், சத்தியமூா்த்தி, குப்புசாமி ஆகிய ஒவ்வொருவரும் இரண்டு பாடல்களுக்கு விளக்கம் அளித்தனா்.
நிறைவில் நுகா்வோா் விழிப்புணா்வு இயக்க ஒருங்கிணைப்பாளா் சம்பத் நன்றி கூறினாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...