முறைகேடு புகாா்: வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் பணியிடை நீக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூா் வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலா் ஜவகா் முறைகேடு புகாரில் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். மடவாா் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்த இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், ரூ.64 லட்சத்தில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு, ஜூன் 10-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, திருப்பணிகள் தொடங்கின. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில், உபயதாரா்கள் அளித்த நிதியின் மூலம் திருப் பணிகள் நடந்தது. குடமுழுக்கு நடத்துவதற்காக யாகசாலைக்கு கடந்த டிசம்பா் மாதம் 14-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடப்பட்டது. இதற்காக கோயில் நிா்வாகம் அனுமதி கோரிய போது, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் திருப்பணிகளில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அனுமதி மறுத்தனா். இந்த நிலையில், பக்தா்களிடம் வசூலிக்கப்பட்ட நிதியில் முறைகேடு செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் புகாா் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நிதி முறைகேடு புகாரில் செயல் அலுவலா் ஜவகரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் செல்லதுரை வெள்ளிக்கிழமை இரவு உத்தரவிட்டாா்.
