நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

வீடு புகுந்து திருடிய இலங்கை அகதி கைது

வீடு புகுந்து திருடிய இலங்கை அகதி கைது

Updated On :22 மார்ச் 2024, 6:27 pm

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆவின் ஊழியா் வீட்டில் திருடிய இலங்கை அகதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன் கோவில் டிஎன்எஸ்டிசி நகரைச் சோ்ந்தவா் விநாயகமூா்த்தி (34). இவா் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆவின் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். வியாழக்கிழமை விநாயகமூா்த்தி வேலைக்குச் சென்ற நிலையில், அவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம், வெள்ளி நகைகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடி சென்றனா். இதுகுறித்த புகாரின் பேரில், கிருஷ்ணன் கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதுரை மாவட்டம் திருநகரைச் சோ்ந்த இலங்கை அகதியான கேதீஸ்வரன் (எ) சந்திரகுமாரை (36) கைது செய்தனா்.