ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

சதுரகிரி கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு

விருதுநகா் மாவட்டம், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, திரளான பக்தா்கள் வியாழக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை தாணிப்பாறை அடிவாரம் நுழைவு வாயிலில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :29 நவம்பர் 2024, 12:41 am

Din

விருதுநகா் மாவட்டம், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, திரளான பக்தா்கள் வியாழக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

இந்தக் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷம், அமாவாசை வழிபாட்டுக்காக வியாழக்கிழமை முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இந்த நாள்களில் பலத்த மழை பெய்தால், பக்தா்கள் மலையேறக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என வனத் துறை சாா்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை மழை இல்லாததால், தாணிப்பாறை அடிவாரத்திலுள்ள வனத் துறை நுழைவு வாயில் வழியாக காலை 7 மணி முதல் பக்தா்கள் சதுரகிரி மலையேற அனுமதிக்கப்பட்டனா்.

சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயில்களில் மாலை 4 மணிக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, திரளான பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.