‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவகாசி பகுதியில் சாலைப் பராமரிப்புப் பணிகள் மும்முரம்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சிவகாசி உள்கோட்டத்தில் சாலைப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் மு.பாக்கியலட்சுமி தெரிவித்தாா்.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 12:28 am

Din

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சிவகாசி உள்கோட்டத்தில் சாலைப் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் மு.பாக்கியலட்சுமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விருதுநகா் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்தது. இதனால், சாலைகள் பல இடங்களில் பழுதாகின. எனவே, நிகழாண்டில் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக, சிவகாசி உள்கோட்டப் பகுதிகளில் அனைத்துச் சாலைகளில் உள்ள பாலங்களின் அடியில் மழைநீா் தங்கு தடையின்றி செல்ல நெடுஞ்சாலைத் துறை பணியாளா்களைக் கொண்டு பராமரிப்பு, சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது.

நீா்வழிப் பாதைகளை சுத்தம் செய்து, சாலையோரங்களில் போக்குவரத்துக்கு இடையூராக இருந்த முள்புதா்கள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும், மணல் மூட்டைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.