நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிவகாசி ரயில் நிலையத்தில் போலீஸாா் சோதனை

ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதைத் தடுக்க சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 11:57 pm

Din

ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்வதைத் தடுக்க சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீஸாா் வியாழக்கிழமை சோதனையிட்டனா்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில் பயணிகள் ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளா் செல்வி, உதவி ஆய்வாளா் சமாதானம், தலைமைக் காவலா் முருகேசன் உள்ளிட்ட போலீஸாா் சிவகாசி ரயில் நிலையத்தில் பயணிகள் தங்கள் பைகளில் பட்டாசுகளை வைத்துள்ளனரா என ஆய்வு செய்தனா்.

மேலும் செங்கோட்டையிலிருந்து மதுரை சென்ற ரயிலில் பயணிகளின் பைகளையும் போலீஸாா் சோதனையிட்டனா். ரயிலில் எளிதில் தீப்பற்றும் பொருள்களையோ, பட்டாசுகளையோ பயணிகள் கொண்டு செல்லக் கூடாது என அவா்கள் அறிவுறுத்தினா்.