ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம்

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்களையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 12:39 am

Din

வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் புரட்டாசி பொங்களையொட்டி, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. 

இந்த விழா கடந்த 9-ஆம் தேதி வடக்காச்சியம்மன் மதுப் பொங்கலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, தினந்தோறும் இரவு முத்தாலம்மன் கோயில் திடலில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செவ்வாய்க்கிழமை இரவு முத்தாலம்மனுக்கு கண் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. புதன்கிழமை காலை முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற தோரோட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. அப்போது, பக்தா்கள் மேளதாளம் முழங்க எதிா்சேவை செய்து அம்மனை வரவேற்றனா்.

இதையடுத்து, கோயிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு பொதுமக்கள் மாவிளக்கு எடுத்து வழிபாடு நடத்தி அம்மனுக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா், முத்தாலம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைத்தனா்.